அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

222 0

டெங்கு நுளம்பு பரவும் விதமாக சூழலை வைத்திருக்கும் பாடசாலைகள் மற்றும் அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறுகின்றார்.

கட்டுமான நடவடிக்கைகள் இடம்பெறும் இடங்களில் டெங்கு நுளம்பு முட்டைகள் காணப்படுமாயின் ஒரு மாத காலத்திற்கு அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும் என்று அவர் கூறுகின்றார்.

மீன்பிடி துறைமுகங்களில் கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்ற படகுகளை அழிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

டெங்கு ஒழிப்பு சம்பந்தமாக இன்று இடம்பெற்ற விஷேட கலந்துரையாடலில் கலந்து கொண்ட சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இவற்றை கூறியுள்ளார்.