நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் பலி

228 0

தொம்பே பிரதேசத்தின் களனி கங்கையில் நீராட சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

நேற்று பிற்பகல் நீராட சென்ற குழுவினரிடையே இரண்டு பேர் இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

27 மற்றும் 29 வயதுடைய ஹெயியன்துடுவை பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர்.

சடலங்கள் தற்போதைய நிலையில் தொம்பே மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் , பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.