டெங்கு நுளம்புகள் அற்ற பாடசாலை வளாகத்தை கட்டியெழுப்புவதற்காக அனைத்து அதிபர்களுக்கும் ஆலோசனை

200 0

எதிர்வரும் 26ம் திகதி இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் , அதன்கு முன்னர் பாடசாலை வளாகத்தை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து அதிபர்களுக்கும் கல்வி அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

அறிக்கையொன்றை வௌியிட்டு கல்வி அமைச்சு இதனை தெரிவத்துள்ளது.

டெங்கு நுளம்புகள் அற்ற பாடசாலை வளாகத்தை கட்டியெழுப்புவதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்காக மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்களின் ஆதரவினை பெற்றுக்கொள்ளுமாறு கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.