குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்

224 0

தொம்பே மாளிகாவத்தை பிரதேசத்தின் குப்பைகளை கொட்டுமிடமொன்றிக்கு அருகில் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த குழுவினரை கலைப்பதற்காக காவற்துறையினரால் கண்ணீர்ப்புகை தாக்குதலொன்று நடத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் சேரும் குப்பைகளை தொம்பே பிரதேசத்தில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேசவாசிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

இந்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக ஹங்வெல்ல கிரிந்திவெல பிரதான வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.