வவுனியா புகையிரதம் மோதுண்டு ஒருவர் பலி

225 0

வவுனியா – தாண்டிக்குளம் புகையிரத நிலையத்தின் அருகாமையில் உந்துருளி ஒன்று புகையிரதத்துடன் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நொச்சிமோடை பிரதேசத்தினை சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவரே உந்துருளியில் பயணித்துள்ள நிலையில் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.

யாழ்ப்பாணம் தொடக்கம் கொழும்பு வரை பயணித்துள்ள புகையிரதத்துடன் மோதுண்டே உயிரிழந்துள்ளார்.

சற்று முன்னர் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உந்துருளியில் பயணித்த இருவரில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகியுள்ளதுடன், ஒருவர் உயிர் தப்பியுள்ளார்.

குறித்த நபர் வவுனியாவில் சிற்றூந்து ஒன்றின் சாரதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபரின் சடலம் தற்போது வவுனியா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

திடீர் என நடந்த இந்த சம்பவ இடத்தில் மக்கள் சூழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.