51 ஆவது நாளாக தொடர்கிறது கேப்பாபுலவு போராட்டம்

195 0

 இராணுவத்தினர் வசமுள்ள கேப்பாபுலவு மக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி காணி உரிமையாளர்கள் 51 ஆவது நாளாகவும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, கேப்பாபுலவில் இடம்பெற்று வரும்  நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை இன்று வடமாகான முதலமைச்சர் சந்தித்து கலந்துரையாடினார் .

இதன்பிரகாரம் 111 ஏக்கர் காணிகளை மாத்திரமே தற்போது விடுவிப்பதற்கு பாதுகாப்பு தரப்பினர் இணங்கியுள்ள போதிலும், காணி விடுவிப்புக்கான கால எல்லை குறித்த உறுதி மொழி வழங்கப்படாமை தொடர்பாகவும் பகுதியளவான காணி விடுப்பு தமக்கு தேவையில்லை எனவும் தெரிவித்த மக்கள்

தமது வாழ்வாதாரங்களை இராணுவத்தினர் பயன்படுத்துவதை நேரில் கண்டு மிகவும் கவலையடைந்தாகவும் தமது காணிகளிலிருந்து ஆயிரக்கணக்கில் தேங்காய்களை பறித்து வைத்திருப்பதாகவும் தமது  காணிகளில் அவர்கள் ஆடம்பர வாழ்க்கை நடாத்துவதாகவும் தாம் வீதியில் கிடந்தது சாவதாகவும்  தெரிவித்தனர்

இதற்க்கு முதலமைச்சர் மக்களை உறுதியோடு போராடுமாறும் போரட்ட்டத்தின் மூலமே தீர்வு காணமுடியும் எனவும் தன்னுடன் சந்திப்புக்கு ஜனாதிபதி வருகிற மாதம் 17 திகதி நேரம் தந்துள்ளதாகவும் இந்த சந்திப்பில் காணி காணாமல் போனோர் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதாகவும் தெரிவித்தார்.