182 வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் மூவர் கைது

236 0

குருந்துவத்த பகுதியில் கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு  அமைய சட்டவிரோதமாக 182 வெளிநாட்டு மதுபான போத்தல்களை கொண்டுச்சென்ற மூவரை மேற்கு கடற்படை கட்டளையின் வீரர்கள் மற்றும் வலான ஊழல் தடுப்பு பிரிவினர் இணைந்து கைதுசெய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் உரிமம் பெறாமல் சட்டவிரோதமாக மோட்டார் வாகனமொன்றின் மூலம் குறித்த  மதுபான போத்தல்களை கொண்டுசெல்லும் போதே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சந்தேக நபர்கள் மற்றும் குறித்த மதுபான போத்தல்கள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மருதானை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது