கொழும்பு குப்பைகளை கொட்ட இடமளிக்க முடியாது!

205 0

கொழும்பு நகரில் சேரும் குப்பைகளை தொம்பே பகுதியில் கொட்ட எதிர்ப்புத் தெரிவித்து இன்று அப் பகுதி மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ஹங்வெல்ல – கிரிதிவெலை வீதியை மறித்து இவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் சேரும் குப்பைகளை தமது பகுதியில் கொட்ட இடமளிக்க முடியாது என, இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறியுள்ளனர்.

எதுஎவ்வாறு இருப்பினும், இன்று வழமைபோல பிலியந்தலை – கரதியான கழிவு கூடத்தில் 349 மெற்றிக் தொன் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.