மீதொட்டமுல்லை விவகாரம்: பொறுப்பு கூற வேண்டியவர் மஹிந்தவே

218 0

மீதொட்டமுல்லை குப்பை மேடு அனர்த்தத்திற்கு பொறுப்புக் கூற வேண்டியது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே என, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

இன்று காலை மல்வத்து பீட மகாநாயக்க தேரரரை பார்க்கச் சென்ற பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.