ஹற்றனில் இரு வேறு இடங்களில் குளவிகளின் தாக்குதலுக்கு இலக்காகி ஒரு பெண் தொழிலாளி உட்பட எட்டு ஆண் தொழிலாளர்கள் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹற்றன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செனன் தோட்டத்தில் கொழுந்து பறித்து கொண்டிருந்தவர்கள் மீதும், வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விக்டன் தோட்டத்தில் கொழுந்து பறித்து கொண்டிருந்தவர்கள் மீதுமே குளவிகள் தாக்கியுள்ளன.
குளவி தாக்குதலுக்கு இலக்கான 09 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மூன்று தொழிலாளர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட ஆறு பேர் தொடர்ந்தும் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.