மட்டக்களப்பில் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீர்த்த அன்னை பூபதியின் 29 ஆவது ஆண்டு நினைவு தினம், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு கல்லடி நாவலடியில் உள்ள அன்னை பூபதியின் கல்லறை அருகில் நடைபெற்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.;யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந் நினைவு தின நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.