உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வரவிருந்த பிரித்தானிய வௌிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலக விவகார அமைச்சர் ஆலோக் ஷர்மா அந்த விஜயத்தை ரத்துச்செய்துள்ளார்.
அந்நாட்டு பிரதமர் தெரேசா மே திடீரென தேர்தலொன்றை அறிவித்துள்ளதால் இவ்வாறு குறித்த பயணம் ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக இந்நாட்டில் அமைந்துள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.