ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி வரிச் சலுகையை இலங்கை மீண்டும் பெற்றுக்கொள்வது தொடர்பான முக்கியமான கூட்டத்தொடர் இன்று பெல்ஜியம் பிரசெல்ஸ் நகரில் ஆரம்பமாகின்றது. இதன் போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் மட்ட குழுவின் மதிப்பீட்டு அறிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மனித உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் காரணமாக நீக்கப்பட்ட ஜீ.எஸ்.பி. வரிச் சலுகை மீண்டும் மே மாதத்தில் இருந்து கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது