ரணில் விக்ரமசிங்க மீதொடமுல்லை விஜயம்

231 0

 ரணில் விக்ரமசிங்க இன்று மீதொடமுல்லைக்கு விஜயம் செய்து பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை கண்டறிந்தார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் வீடுகளை வழங்குவோம் என இதன்போது  ரணில்   தெரிவித்துள்ளார்.

வியட்நாம் விஜயம் செய்திருந்த ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை நாடு திரும்பிய நிலையிலேயே இங்கு விஜயம் செய்துள்ளார்.

கடந்த 14 ஆம் திகதி மீதொடமுல்ல குப்பை மேடு இடிந்து விழுந்து ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக 32 பேர் உயிரிழந்ததுடன் சுமார் 150 வீடுகள் சேதமாக்கப்பட்டு, 180 குடும்பங்களைச் சேர்ந்த 625 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.