13 லட்சம் பெறுமதியான சிகரெட் தொகையுடன் சீன நாட்டு பெண் ஒருவர் கைது

284 0

சட்டவிரோதமான முறையில் உள்நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 13 லட்சம் பெறுமதியான சிகரெட் தொகையுடன் சீன நாட்டு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை டுபாய் நாட்டில் இருந்து குறித்த சிகரெட் தொகை கொண்டுவரப்பட்டுள்ள நிலையிலே குறித்த பெண் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்நிலையில் குறித்த பெண்ணிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு ஒருலட்சம் ரூபாய் அபராத தொகையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.