மீதொட்டமுல்ல அனர்த்தம் – பலி எண்ணிக்கை 31ஆக உயர்வு

223 0

மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது.

10 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் இணைப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தொடர்ந்தும் அவர்களை தேடும் மீட்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

சம்பவத்தில் காயமடைந்த 11 பேர் இன்னும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டின்படி, 79 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 17 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் 228 குடும்பங்களைச் சேர்ந்த 980 பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.