மீதொட்டமுல்ல அனர்த்தத்தை தவிர்த்திருக்க முடியும் – மஹிந்த

205 0

தமது அரசாங்க காலத்தில் திட்டமிடப்பட்டிருந்தவற்றை தற்போதைய அரசாங்கம் நடைமுறைபடுத்தியிருந்தால் மீதொட்டமுல்ல அனர்த்தம் ஏற்பட்டிருக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று முற்பகல் தலதாமாளிகைக்கு சென்ற அவர், ஊடகங்களை சந்திக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

தமது அரசாங்க காலத்தில் உலக வங்கியின் நிதியுதவியுடன் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டன.

அவற்றை நடைமுறைப்படுத்தும் முன்பே தமது அராங்கம் ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டது.

எனவே அவ்வாறான திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருந்தால் இத்தகைய அனர்த்தங்கள் ஏற்பட்டிருக்காது என மஹிந்த குறிப்பிட்டார்.