உலக சைவ மாநாடு எதிர்வரும் 22 ,23,24 ஆகிய மூன்று தினங்கள் யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ளதாக யாழ் பல்கலைக்கழக இந்து நாகரீக துறை பேராசிரியர் வேதநாதன் தெரிவித்தார்.
இம் மாநாட்டில் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் எனப் பலர் இதில் பங்கேற்பர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பெருமையை உலகுக்கு வெளிப்படுத்தவும் இந்த மாநாடு நிச்சயம் உதவும். இந்த ஆய்வு மாநாட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மட்டுமன்றி தென்கிழக்கு, கிழக்கு, பேராதனை, சப்ரகமுவ ஆகிய பல்கலைக்கழகங்களின் ஆய்வாளர்கள், மாணவர்கள், ஆசிரிய பயிற்சிக் கலாசாலை, தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் கள், மாணவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.