வில்பத்து விவகாரம் தொடர்பில் அரசுடன் விரைவில் பேச்சு – தமிழ் தேசிய கூட்டமைப்பு

262 0

வில்பத்து விவகாரம் தொடர்பில் அரசாங்கம் மற்றும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் மிக விரைவில் விரிவாக எமது தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றக் குழு பேச்சு நடத்தும் என எதிர்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்தார்.

இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளா் சந்திப்பின் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை, வடக்கில் பாதுகாப்புப் படையினா் வசம் உள்ள சகல காணிகளை மீள பொதுமக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் விடயம் தொடர்பில் எதிா்கட்சித் தலைவா் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற குழு உறுப்பினர்கள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் அதிகாரிகளை இன்று பாதுகாப்பு அமைச்சில் சந்தித்து கலந்துரையாடல் நடத்தியதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

மேலும், யாழ்ப்பாணத்தில் இன்னும் 6,000 ஏக்கா் நிலம் விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் இதன்போது சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்