விசேட போக்குவரத்துச் சேவைகள்

296 0

புதுவருடத்திற்காக தமது சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள், மீண்டும் திரும்புவதற்காக விசேட பேரூந்து மற்றும் தொடரூந்து சேவைகள் ஈடுபடுத்தக்கட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, நேற்று முதல் விசேட தொடரூந்து சேவைகள் இடம்பெறுவதாக
இலங்கை தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், அலுவலக பணியாளர்களுக்கும் வழமையான சேவை வழங்கப்படும் என தொடரூந்து பிரதி முகாமையாளர் பி.பீ.ஏ. ஆரியரட்ன தெரிவித்துள்ளார்.

இதனிடையே தலைநகரம் வரும் பொதுமக்களின் நலன் கருதி விசேட பயணிகள் பேரூந்துக்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பீ. ஹேமசந்திர தெரிவித்தார்.

இதனிடையே, பொது மக்களுக்கான சகல ஒழுங்குகளையும் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிரிவர்தன தெரிவித்துள்ளார்.