குப்பை மேடு சரிவு – சொத்து விபரங்களை மதிப்பிடும் பணிகள் இன்று முதல் ஆரம்பம்

302 0

கொலன்னாவ – மீதொட்டமுல்ல குப்பை மேடு சரிவு காரணமாக பாதிப்புக்கு உள்ளான சொத்து விபரங்களை மதிப்பிடும் பணிகள் இன்று முதல் இடம்பெறவுள்ளன.

உள்துறை அமைச்சு இதனை குறிப்பிட்டுள்ளது.

அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், கொழும்பு மாவட்ட செயலகம் மற்றும் கொலன்னாவ பிரதேச பொதுச்செயலக காரியாலய அதிகாரிகளை இந்த பணிகளில் ஈடுபடுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அபாய பகுதிகளில் வாழும் மக்களை இனங்கண்டு, அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பும் நடடிவடிக்கைகளும் இடம்பெறவுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, மீதொட்டமுல்ல சம்பவம் தொடர்பான இழப்பீட்டு அறிக்கையை 5 தினங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன நேற்று, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு உத்தரவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.