அரசாங்கத்திற்கு எதிரான மிகப் பெரிய மே தினக் கூட்டம் -பசில் ராஜபக்ச

266 0

அரசாங்கம் முன்னெடுத்து வரும் மக்கள் விரோத வேலைத்திட்டத்தை தோற்கடிப்பதற்காக அரசாங்கத்திற்கு எதிரான சகல தரப்பினரும் கைக்கோர்த்து கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிரான மிகப் பெரிய மே தினக் கூட்டம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் கொழும்பு காலிமுகத் திடலில் நடைபெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளும், சுமார் 150 தொழிற்சங்கங்களும் அரசாங்கத்திற்கு எதிரான மே தினக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து துறைகளிலும் அரசாங்கம் நாட்டு மக்களை துன்பத்திற்கு உள்ளாக்கி வருவதுடன் இரண்டு வருடங்களுக்கு மேலாக உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைத்து வருகிறது.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டாச்சி மேற்கொண்டு வரும் மக்கள் விரோத வேலைத்திட்டத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் மேடையாக, மே தினக் கூட்டத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் பசில் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.