தங்கம் கடத்த முற்பட்ட இரு இலங்கையர்கள் கைது

276 0

87 இலட்சம் இந்திய ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஒருதொகை தங்கத்தை சட்டவிரோதமாக கடத்த முற்பட்ட இலங்கையர்கள் இருவர் இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

45 மற்றும் 42 வயதான இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவர்கள் வசம் இருந்து 2915 கிராம் நிறையுடைய 25 தங்க கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவற்றின் பெறுமதி 87 இலட்சத்து 45,000 இந்திய ரூபாய் என இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

கைதுசெய்யப்பட்ட இலங்கையர்கள் குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.