வவுனியாவில் வயல்வெளியில் அமைந்துள்ள கிணற்றில் யானை குட்டிகள் உட்பட நான்கு யானைகள் விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த யானைகள் ஓமந்தை கொம்புவைத்த குளத்தில் இன்று காலை முதல் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ளனர்.
இருப்பினும் வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்ட போதும் இது வரையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.