சிகரட் பக்கட்டில் மாற்றம்?

365 0

1399902940_9011372_hirunews_cigarette-packetமதுபானம் மற்றும் சிகரட் உள்ளிட்ட புகைப்பொருட்கள் பாவனையை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுக்கு அனைத்து நடவடிக்கைகளும் ஒத்துழைப்பு வழங்கவிருப்பதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் செயலாளர் வைத்தியர் நலின் ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.

மதுபானம் மற்றும் புகைப்பொருட்களின் பாவனையைக் குறைக்க அவற்றின் விலைகளை அதிகரிப்பது சிறந்த விடயம்.

ஆனால் சிகரட்டின் பொதியில் மீண்டும் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு முன்னர் மிகுந்த ஆய்வுகளை நடத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது சிகரட் பொதிகளில் 80 சதவீதம் எச்சரிக்கை படங்கள் உள்ளன.

எனினும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் நடைமுறையில் உள்ளதைப் போன்று, மேலும் 20 சதவீதத்தை வெறுமையாக விடுவது குறித்து ஆலோசிப்பதாக, சுகாதார அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.