கே.பி.க்கு வெளிநாடு செல்ல தடை

428 0

kp_CIவிடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனுக்கான வெளிநாட்டு பயணத் தடை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இந்த தடை நீடிப்பு செய்யப்பட்டது.

கே.பியை சட்டத்தின் முன்னால் நிறுத்த வேண்டும் என்று தெரிவித்து, ஜே வி பி தாக்கல் செய்திருந்த மனு, நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது அவர் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வதற்கான தடையை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதிவரையில் நீதிமன்றம் நீடித்தது.