மீதொட்டமுல்லையில் இருந்து 130 குடும்பங்களை வெளியேறுமாறு தேசிய கட்டிடங்கள் ஆய்வு மையம் கோரிக்கை

231 0

குப்பை மேடு சரிவினால் பலரை பலிகொண்ட மீதொட்டமுல்ல பகுதியில் இருந்து மேலும் பலரை வெளியேறுமாறு தேசிய கட்டிடங்கள் ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது

இந்த பகுதியில் அபாயத்துக்கு உள்ளாகியுள்ள மேலும் 130 குடும்பங்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஆய்வு மையம் கோரியுள்ளது

ஏற்கனவே மீதொட்டமுல்லை குப்பை மேடு சரிவின் காரணமாக 17பேர் வரை கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அந்த பகுதியில் அமைந்துள்ள குப்பை மேட்டை வேறு இரண்டு இடங்களுக்கு மாற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது

முன்னதாக பல தடவைகள் இந்த குப்பை மேட்டை வேறு இடத்துக்கு மாற்றுமாறு கோரி பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.