இலங்கையில் தங்கியிருந்த இந்தியர் கைது

186 0

குடிவரவு சட்டங்களை மீறி இலங்கையில் தங்கியிருந்த இந்தியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்று மாத்தளை பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட 52 வயதான இந்தியர் இன்று மாத்தளை நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.