மீதொட்டுமுல்லை குப்பைமேட்டு சரிவில் பலியானோர் எண்ணிக்கை 16ஆக அதிகரித்துள்ளது.
நேற்றையதினம் இடமெற்ற இந்த அனர்த்தத்தில் 100க்கும் அதிகமான வீடுகள் மூடப்பட்டன.
12க்கும் அதிகமானவர்கள் வைத்தியசாலையில் அனுமதிப்பப்பட்டுள்ளனர்.
இந்த குப்பை மேட்டை அகற்றுமாறு நீண்டகாலமாக போராட்டம் நடத்தப்பட்டப் போதும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதேவேளை அனர்த்தம் இடம்பெற்ற பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது
மீதொட்டுமுல்லை குப்பை மேடு சரிவில் ஏற்பட்ட முழுமையான பாதிப்பு விபரங்கள்…
மரணம் – 16 பேர்
வைத்தியசாலையில் : 12 பேர் (5 பேர் வெளியேறினர் – 7 பேர் சிகிச்சைப் பெறுகின்றனர்)
பாதிக்கப்பட்ட மக்கள் – 180 குடும்பங்களின் 625 பேர்
வீடுகள் – 145 முழுமையாக சேதம்