இன்றும் விசேட பஸ் சேவை- இ.போ.ச.

244 0

புத்தாண்டைக் கொண்டாடும் தமிழ், சிங்கள மக்களுக்கு தமது உறவினர்களின் வீடுகளுக்குச் செல்லும் சம்பிரதாயப் பணிகளை தடையின்றி மேற்கொள்ள விசேட போக்குவரத்துச் சேவைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கைப் போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.

எந்தப் பிரதேசத்துக்கு எந்தளவு பஸ் வண்டிகளைச் சேவையில் ஈடுபடுத்த வேண்டும் என தமக்கு அனுபவங்கள் உள்ளதாகவும், அதன்படி அதிகமான பயணிகள் உள்ள இடங்களுக்கு அதிகமான பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவும் திட்டமிட்டுள்ளதாக இ.போ.ச.வின் பிரதான செயற்திட்ட அதிகாரி பி.எச்.ஆர்.ரி. சந்திரசிறி தெரிவித்துள்ளார்