இன்று மீதொடமுல்லை அனர்த்தத்தைப் பார்வையிட வர வேண்டாம்- பொலிஸ்

231 0

மீதொடமுல்லை மீட்புப் பணியை துரிதப்படுத்துவதற்கு, ஏனைய பிரதேசங்களிலுள்ள பொது மக்கள் தடையாக இருக்க வேண்டாம் என பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இடிபாடுகளுக்குள் சிக்குண்டவர்கள் இன்னும் மீட்கப்பட வேண்டியுள்ளதனால், இன்றைய தினம் மீதொடமுல்ல அனர்த்தத்தைப் பார்வையிட வருவதைத் தவிர்ந்து கொள்ளுமாறும்  பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் என்பன எந்தவிதக் குறைவும் இல்லாமல் செய்து கொடுப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.