5 வருடங்களுக்கு அரசியல் முரண்பாடு வேண்டாம் – பிரதமர்

367 0

PMஎதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு அரசியல் மோதல்களை தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

வத்தளையில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பு ஒன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கும், மகிந்த தரப்பு உறுப்பினர்களுக்கும் இடையில் வேறுபாடுகள் இருக்கின்றன.

மக்களின் பைகளில் பணத்தை வைப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி முயற்சிக்கிறது.

தங்களதும், தங்களின் பிளைகளுக்காகவும் பணத்தை சேர்க்கவும், மாளிகைகளை அமைக்கவும் மகிந்த தரப்பு முயற்சிக்கிறது.

தற்போது நாட்டில் சிறந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த நிலையில் எதிர்வரும் 5 வருடங்களுக்கு அரசியல் முரண்பாடுகளை விடுத்து, நாட்டின் நலனுக்காக செயற்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.