ஜப்பானில் கத்திகுத்து – பலர் பலி

334 0

kathi_8ஜப்பானில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் 19 பேர் பலியாகினர்.

அந்த நாட்டின் சகமிஹாரா நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேலும் 26 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அவர்களில் 20 பேரின் நிலைமை மோசமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட தேவையுடையோரை இலக்குவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர் வழங்கிய வாக்குமூலத்தில், தாம் விசேட தேவை உடையோரை அழித்துவிட வேண்டும் என்பதற்காகவே இந்த தாக்குதலை நடத்தியதாக கூறியுள்ளார்.