தமிழ், சிங்கள புத்தாண்டின் சுப நேரங்கள் அடங்கிய புத்தாண்டு சுபநேர அட்டவணையினை பாரம்பரிய சம்பிரதாயங்களுடன் ஜனாதிபதியிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று முற்பகல் இடம்பெற்றது
இந்த நிகழ்வு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
கலாச்சார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பீ.நாவின்ன, அமைச்சின் செயலாளர் டீ. ஸ்வர்ணபால ஆகியோரால் குறித்த அட்டவணை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
புத்தாண்டு உதயம், புண்ணிய காலம், அடுப்பு மூட்டுதல், உணவு தயாரித்தல் மற்றும் உணவு உட்கொள்ளல், தலைக்கு எண்ணெய் வைத்தல் மற்றும் புதிய வருடத்தில் தொழிலுக்கு புறப்பட்டுச் செல்லல் போன்ற புத்தாண்டு பாரம்பரியங்களுக்கான சுப நேரங்கள் இந்த சுபநேர அட்டவணையில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

