நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் மூன்று தினங்களில் இடியுடன் கூடிய மழை!

245 0

மேல், மத்திய , வடமத்திய , ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் மூன்று தினங்களில் 50 மில்லி மீற்றருக்கும ்அதிகமான இடியுடன் கூடிய பலத்த மழை பொழியக்கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை , இந்த மழையுடன் கடும் காற்றும் வீசக்கூடும் எனவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, விபத்துக்களை தவிர்த்துக்கொள்வதற்காக அவதானத்துடன் செயற்படுமாறு காலநிலை அவதான நிிலையம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.