கொரிய தீபகற்பத்தில் தற்போது பதற்றமான நிலை ஏற்றப்பட்டுள்ளது.
அமெரிக்கா தமது யுத்தக் கப்பல்களை கொரிய தீபகற்பத்தை நோக்கி நகர்த்தியுள்ள நிலையிலேயே இந்த பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
வடகொரியாவின் ஏவுகணைச் சோதனைகளால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பல யுத்தக் கப்பல்களை அமெரிக்கா, கொரிய தீபகற்பம் நோக்கி நகர்த்தியுள்ளது.
இதனிடையே, வடகொரியாவின் அச்சுறுத்தலை அமெரிக்கா தனித்து சமாளிக்கும் என்று டொனால்ட் ட்ரம்ப், ஏற்கனவே கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.