காவல்துறையினர் என கூறி, வெள்ளை நிற வேனில் வந்த ஆயுத குழுவொன்று, அநுராதபுரம் – இபலேகம பகுதியில் ஒருவரை கடத்திச் சென்றுள்ளது.
38 வயதான ஒருவரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கடத்தப்பட்டுள்ளவர், அநுராதபுரம் மாவட்த்தின் அரசியல் வாதி ஒருவரின் பிரத்தியேக பாதுகாவளர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இரண்டு காவல்துறை குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.