மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் : வர்த்தமானி அறிவித்தல் தற்காலிகமாக இரத்து!

284 0

மோட்டார் சைக்கிள் தலைக்கவசம் அணியும் போது 10 விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி தற்காலிகமாக இரத்துசெய்யப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தினை வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கொதாகொட தெரிவித்தார்.

குறித்த வர்த்தமானியில் வெளியிடப்பட்ட சில விதிமுறைகள் தொடர்பில் பிரச்சினைகள் நிலவுவதால் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த விதிமுறைகளில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.