ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாத தாக்குதல் முறியடிப்பு – 4 தீவிரவாதிகள் பலி

337 0

சிரியாவில் பாதுகாப்பு படையினர் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்த இருந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டது. அப்போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் தீவிரவாதிகள் 4 பேர் உயிரிழந்தனர்.

ஈராக் நாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக உள்நாட்டு படையினருடன் அமெரிக்க கூட்டுப்படைகள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் அங்கு சிரியா எல்லையில், ரமாடி நகரில் இருந்து 440 கி.மீ. தொலைவில் உள்ள அல் வாலீத் என்ற இடத்தில் பாதுகாப்பு படையினரை நோக்கி ஐ.எஸ்.தீவிரவாதிகள் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்த முற்பட்டனர்.

ஆனால் இந்த தாக்குதலை பாதுகாப்பு படையினர் முறியடித்தனர். அப்போது ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அவர்கள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 பேர் உயிரிழந்தனர்.

இந்த தகவலை ஈராக் பாதுகாப்பு படை கமாண்டர் ஷாகர் அல் ரிஷாவி கூறியதாக ‘அல்சுமாரியா நியூஸ்’ நிறுவனம் கூறுகிறது. இந்த தாக்குதலின்போது தீவிரவாதிகளின் வாகனங்களும் சின்னாபின்னமாகி விட்டதாக தெரிய வந்துள்ளது.