நுவரெலியா நல்லதண்ணி நகரில், நுகர்வுக்கு உகந்ததல்லாத பொருட்களை விற்பனை செய்தமைக்காக, 3 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்படவுள்ளது.
நுவரெலியா மாவட்ட பொது சுகாதார பரிசோதகர்கள், நல்லதண்ணி நகரிலுள்ள வரத்தக நிலையங்களில், நேற்று மதியம் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இதன்போது, 3 வியாபார நிலையங்கள், நுகர்வுக்கு உகந்ததல்லாத பொருட்களை விற்பனை செய்தமை தெரியவந்துள்ளது. அதனைத்தொடர்ந்து அவர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யவுள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
மேலும் 4 வியாபார நிலையங்களில் நுகர்வுக்கு உகந்ததல்லாத முறையில் விற்பனைக்காக வைத்திருந்த பொருட்கள் அழிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்றைய இச் சுற்றிவளைப்பின் போது 38 வியாபார நிலையங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

