இலங்கையில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாலியல் தொழிலில்- எம்.புவிராஜ் (காணொளி)

257 0

 

இலங்கையில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாலியல் தொழில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு கல்வி வலய முன்பள்ளி அபிவிருத்தி பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.புவிராஜ் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பயனியர் வீதியில் உள்ள மதர்ஸ் கெயார் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி உள்ளக அரங்கில் நடைபெற்றது.

முன்பள்ளி தலைவர் டாக்டர் அமரசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலய முன்பள்ளி அபிவிருத்தி பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.புவிராஜ் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது சிறுவர்களின் உடற்பயிற்சி கண்காட்சியும் நடைபெற்றதுடன், பழைய மாணவர்கள், பெற்றோருக்கான நிகழ்வுகளும் நடைபெற்றன.