நுவரெலியாவில் இருந்து பொகவந்தலாவ பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியது(காணொளி)

265 0

நுவரெலியாவில் இருந்து பொகவந்தலாவ பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியில் குறித்த முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்று மதியம் 2.30 மணியளவில் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக நானுஓயா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
முச்சக்கரவண்டியின் பிறேக் செயழிழந்ததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் முச்சக்கரவண்டி சாரதியும், மற்றொருவரும் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.