இன்று பொருட்களின் விலைகள் மிகவும் அதிகரித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறுகின்றார்.
நிதியமைச்சர் எவ்வகையான கெளரவம், மரியாதைகளை பெற்றாலும் மக்களுக்கு கஷ்டம் கொடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
உடகணுகல பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் கட்டிடம் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். அத்துடன், தற்கோதைய அரசாங்கத்தின் கீழ் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் சில நிறுவனங்கள் சுயாதீனமாக செயற்படுவதில்லை என்றும் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தினார்.

