சைட்டம் பிரச்சினையை தீர்ப்பதற்கான யோசனை இன்று சமர்ப்பிக்கப்படும்

263 0

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி பிரச்சினையை தீர்ப்பதற்கான யோசனை இன்று மாலைக்குள் சமர்ப்பிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

சபை முதல்வரும், உயர்கல்வி அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல இதனை அறிவித்துள்ளார்.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இதேவேளை, மாலபே தனியார் மருத்துவ சங்கத்தினரும், இந்த விடயம் குறித்த தமது கருத்துக்களை முன்வைத்து வந்தனர்.

எனினும், குறித்த பிரச்சினைக்கு தொடந்தும் தீர்வுகாணப்படாதுள்ள நிலையில், அந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கான யோசனையை இன்று மாலைக்குள் முன்வைப்பதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார்.