அம்பாறையில் உணவு ஒவ்வாமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

221 0
அம்பாறை இறக்காமம் பகுதியில் உணவு ஒவ்வாமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், சுமார் 500 இற்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இறக்காமம் பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று முன்தினம் புதன்கிழமை நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது வழங்கப்பட்ட பகல் உணவை உட்கொண்டவர்களே உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், 4 பேரின் உயிரை பறித்த குறித்த உணவு கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.