மரண தண்டனையை நீக்க புதிய அரசியல் அமைப்பில் பரிந்துரை

246 0

புதிய அரசியல் அமைப்பில் மரண தண்டனையை நீக்குவதற்கான பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் அமைப்பிற்கான யோசனைகளை முன்வைப்பதற்காக ஆறு உபக்குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

அவற்றில் அடிப்படை உரிமைகள் தொடர்பான உபகுழு, அமைச்சர் மஹிந்த சமரசிங்கவின் தலைமையில் இயங்குகின்றது.

இந்த குழுவினால், பிரதமர் தலைமையிலான அரசியல் அமைப்பு வழிநடத்தல் குழுவுக்கு அறிக்கை ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

இதில் இலங்கையில் புதிய அரசியல் அமைப்பில்; மரண தண்டனை நீக்கப்பட வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அந்த குழுவின் அங்கத்தவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.அரவிந்த்குமார் தெரிவித்தார்.

இந்த யோசனை தயாரிப்புக்காக, 2009ஆம் ஆண்டு அரசியல் யாப்பு வரைவு மற்றும் 2016ஆம் ஆண்டு மே மாதம் முன்வைக்கப்பட்ட பொதுமக்கள், அரசியல் மற்றும் பொது அமைப்புகளின் கருத்துக்கள் அடங்கிய அறிக்கை போன்றவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.