இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் சிலர் நேற்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் சிலர் சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நள்ளிரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் மின்பாவனையாளர்களுக்கு பாரிய பாதிப்பு எதுவும் இல்லையென மின்சாரசபை நிறைவேற்று அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சாரசபை தொழிநுட்பதுறைச் சார்ந்தவர்கள் தொழிற்சங்க வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் ஆனால் அவர்களில் பாதிபேர் இன்றையதினம் வேலைக்கு சமுகமளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றையதினம் வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்தவர்களுக்கு பதிலாக தற்காலிகவர்களை அப்பணியில் அமர்த்தியுள்ளதாகவும் இதனால் அவசர மின்துண்டிப்பு ஏற்படும்போது அப்பணியாளர்களை பயன்படுத்தவுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
மின்சாரம் தொடர்பான கடைமைகள் வழமைபோல நடைபெற்றுவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும் மின்சாரசபை ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக மின்சாரசபையுடன் தொடர்புடைய பலவேலைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.