மின்சார சபை சேவையாளர்கள் சங்கத்தின் போராட்டம் தொடர்கிறது

280 0
வேதன பிரச்சினை தீர்க்கப்படாமை மற்றும் ஊழியர்களுக்கு எதிராக ஒடுக்கு முறைக்கு  எதிர்பு தெரிவித்து ஒன்றிணைந்த இலங்கை மின்சார சபை சேவையாளர்கள் சங்கம் நேற்று நள்ளிரவு ஆரம்பித்த நாடு தழுவிய ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்கிறது.
தமது போராட்டம் சிறந்த முறையில் இடம்பெற்று வருவதாக சங்கத்தின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
போராட்டத்தில் ஈடுபடும் தமது சங்க உறுப்பினர்களுக்கு சில இடங்களில அழுத்தம் கொடுக்கப்படுவது தொடர்பில் தமக்கு முறையிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தநிலையில் இன்று மதியம் இது தொடர்பில் முக்கிய பேச்சு வார்த்தை ஒன்று இடம்பெறும் என்றும், அதில் போராட்டம் தொடர்பில் முக்கிய தீர்மானங்கள் எட்டப்படும் எனவும் தெரிவித்தார்.