சட்டவிரோதமாக கடத்த முற்பட்ட ஒருதொகை வல்லப்பட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
விமான நிலைய சுங்கப் பிரிவினர் குறித்த வல்லப்பட்டைகளுடன் சந்தேகநபர் ஒருவரையும் கைதுசெய்துள்ளனர்.
இந்தியாவின் சென்னை நகரை நோக்கி செல்லவிருந்த விமானத்தில் புறப்படத் தயாராக இருந்த வேளையே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும், சந்தேகநபர் வசம் இருந்து 25 கிலோகிராம் வல்லப்பட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.