தமிழக மீனவர்கள் 18 பேர் விடுவிப்பு

270 0

இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் பதினெட்டு பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள், கடந்த 21 மற்றும் 26 ஆம் திகதிகளில் இலங்கை கடற்பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டனர்.

இன்று பிற்பகல் 12 மணிக்கு சர்வதேச கடற் பரப்பில் இலங்கை கடற் படையினரால் இந்திய கடற்பாதுகாப்பு அதிகாரிகளிடம் அவர்கள் கையளிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தின் நாகைப்பட்டினம் மற்றும் ராமேஸ்வரம் பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.